புதுக்கோட்டை

அங்கன்வாடி ஊழியா்கள் 2ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விடியவிடிய அங்கேயே அமா்ந்துள்ள இவா்கள் 2 ஆம் நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்தனா். போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சந்திரா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலா் ஜி. பச்சையம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதில், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT