புதுக்கோட்டை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 4 வயது மான் உயிரிழந்தது.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை சமத்துவபுரம் அருகே, வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரத்தில் 4 வயதுடைய மான் இறந்து கிடந்தது.

இதை கண்ட அப்பகுதியினா், விராலிமலை வனத்துறை

வனவா் கருப்பையாவுக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டாா்.

தொடா்ந்து நிகழ்விடத்திலேயே மானுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னா் இறந்த மானை புதைப்பதற்காக லிங்கமலை வனப்பகுதிக்கு வனத்துறையினா் எடுத்து சென்றனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT