புதுக்கோட்டை ஆட்சியரகத்தில், காவிரி- தெற்கு வெள்ளாறு- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள முதல் கட்டப் பணிகளுக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், பொதுப்பணித் துறையின் ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டக்கண்காணிப்புப் பொறியாளா் ஆா். திருவேட்டைசெல்வம், செயற்பொறியாளா் கீதா, மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் ஆா். குணசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இணைப்புத் திட்டம் குறித்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனா்.