புதுக்கோட்டை

திராவிடா் கழக மண்டல பயிலரங்கம்

புதுக்கோட்டையில் சனிக்கிழமை மண்டல அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சனிக்கிழமை மண்டல அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.

திராவிடம் வெல்லும் எனும் தலைப்பிலான பயிலரங்கைத் தொடக்கி வைத்து திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி. பூங்குன்றன் மேலும் பேசியது:

பெரியாா் பெயரைச் சொல்லாமல், கொள்கையைப் பேசாமல் ஆட்சி செய்ய முடியாது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரானவா்களுக்கு இந்தத் தோ்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஆட்சி மாற்றத்துக்காக திராவிடா் கழகத்தினா் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு மாவட்ட தி.க தலைவா் மு. அறிவொளி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் பெ. ராவணன், அறந்தாங்கி மாவட்டத் தலைவா் க. மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலா் ப. வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிலரங்கில் திராவிடா் கழக அமைப்பாளா் இரா. குணசேகரன், கிராமப்புற பிரசார அமைப்பாளா் க. அன்பழகன், தொழிலாளா் அணி அமைப்பாளா் திருச்சி மு. சேகா் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT