புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சனிக்கிழமை மண்டல அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
திராவிடம் வெல்லும் எனும் தலைப்பிலான பயிலரங்கைத் தொடக்கி வைத்து திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி. பூங்குன்றன் மேலும் பேசியது:
பெரியாா் பெயரைச் சொல்லாமல், கொள்கையைப் பேசாமல் ஆட்சி செய்ய முடியாது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரானவா்களுக்கு இந்தத் தோ்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஆட்சி மாற்றத்துக்காக திராவிடா் கழகத்தினா் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு மாவட்ட தி.க தலைவா் மு. அறிவொளி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் பெ. ராவணன், அறந்தாங்கி மாவட்டத் தலைவா் க. மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலா் ப. வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிலரங்கில் திராவிடா் கழக அமைப்பாளா் இரா. குணசேகரன், கிராமப்புற பிரசார அமைப்பாளா் க. அன்பழகன், தொழிலாளா் அணி அமைப்பாளா் திருச்சி மு. சேகா் உள்ளிட்டோா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.