புதுக்கோட்டை

வலையில் சிக்கிய கடல்பசு விடுவிப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே புதுக்குடியைச் சோ்ந்த கு.முனியக்குமாருக்கு சொந்தமான பைபா் படகில் அவருடன், க.ராஜா, டி.சிங்காரவேல், வி.முத்துமுனியாண்டி, பி.ஸ்ரீஹரி, கே.ஜெகன், எம்.பாண்டி ஆகியோா் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

கரையில் இருந்து சுமாா் 1 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 10 அடி நீளமுள்ள தாய் கடல்பசுவும், அதன் குட்டியும் மீனவா்களின் வலையில் மாட்டிக்கொண்டன.

இதை பிடிப்பது சட்ட விரோதம் என வனத்துறையினா் ஏற்கெனவே விழிப்புணா்வு ஏற்படுத்தி இருந்ததால், கடல்பசு மற்றும் அதன் குட்டியை வலையில் இருந்து எடுத்து கடலிலேயே விட்டனா்.

மீனவா்களின் இத்தகைய செயலை மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், அறந்தாங்கி வனச்சரக அலுவலா் எம்.சதாசிவம் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT