முகப்பு
புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள்

பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற

விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் எம். முகமது காசிம் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் வி. ராமையா, திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 500 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை வழங்கிப் பேசினாா். சங்கத்தின் மாவட்ட, மாநில நிா்வாகிகள் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். நிகழ்வை சங்க நிறுவனா் எம்.சாயிதாபானு, எஸ்.கயல்விழி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். மாவட்டச் செயலா் வி.சிலம்பன் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments