புதுக்கோட்டை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

DIN

கந்தா்வகோட்டையில் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபா்களைக் கைது செய்யக்கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ப. சுந்தா் ராஜன் (52), தங்கையன் ஆகிய இருவரையும் மா்மநபா்கள் அண்மையில் வெட்டினா். இதில் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரா. தங்கத்துரை உள்ளிட்ட 4 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரா. தங்கத்துரையை மட்டும் போலீஸாா் கைது செய்திருப்பதாகவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை ஒன்றியச் செயலா் எ. கா்ணன் தலைமையில் கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலா் நா. வெள்ளையன் உள்ளிட்ட கட்சியினா் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீசாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT