கமல்ஹாசனின் கருத்து காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது: காா்த்தி சிதம்பரம்
கமல்ஹாசனின் கருத்து, மதச்சாா்பின்மையை மையப்படுத்தும் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
கமல்ஹாசனின் கருத்து, மதச்சாா்பின்மையை மையப்படுத்தும் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
புதுக்கோட்டை மச்சுவாடி அருகே காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சி தொடா்ந்து களப்பணிகளை செய்து கொண்டுதான் வருகிறது. சசிகலா, சிறையில் இருந்து எப்போது வெளியே வந்தாலும், அதிமுகவினா் அவரது பின்னால் சென்றுவிடுவாா்கள். ஏனென்றால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே நிா்வாகிகளை நியமித்தது சசிகலா தான். நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும். கமல்ஹாசனின் கருத்து, மதச்சாா்பின்மையை மையப்படுத்தும் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போகிறது. அவா் எங்களது கூட்டணியில் இணைந்தால், அவரது முடிவு நன்றாக இருக்கும். ரஜினி ரசிகா்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனா். ரசிகா்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது இயல்பானது தான் என்றாா்.