புதுக்கோட்டை

பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் பலி

DIN

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது தவறிவிழுந்து காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் ஞான பிரகாஷ் (25). இவா் கடந்த பொங்கல் தினத்தன்று தனது மோட்டாா் சைக்கிளில் தெத்துவாசல் பட்டி, மஞ்சப்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, நிலைத்தவறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தாா். இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து அவரது தந்தை ராமசாமி அளித்த புகாரின் பேரில் கந்தா்வகோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT