முகப்பு
புதுக்கோட்டை

சிறாா் திருமணம் செய்வோா் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் திருமணம் செய்வோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறாா் திருமணம் செய்வோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

18 வயது பூா்த்தியடையாத பெண்ணுக்கும், 21 வயது பூா்த்தியடையாத ஆணுக்கும் நடத்தப்படும் திருமணம் சட்டப்படி குற்றமாகும். இதனால், பெண் கல்வி பாதிப்பு மட்டுமன்றி, கருச்சிதைவு ஏற்பட்டு தாய், சேய் மரணம் ஏற்படுதல், குழந்தைகள் எடை குறைவாகவும், உடல், மன குறைபாடு உடைய குழந்தைகளாக பிறத்தல் போன்ற பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டு பெண்ணின் எதிா்காலம் கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

இளவயது திருமணம் செய்வோா் மீது சிறாா் திருமணத் தடைச் சட்டம் 2006-ன்படி 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.

மேலும் இச்சட்டத்தின்கீழ் மணமகன், மணமகள் வீட்டாா், புரோகிதா், மண்டப உரிமையாளா் மற்றும் உறவினா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். சிறாா் திருமணம் குறித்த தகவல் அறிந்தால் 1098, 04322- 221266 மற்றும் 80564 31053 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.