முகப்பு
புதுக்கோட்டை

குருக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கரோனா காலத்தில் வேலையின்றித் தவிக்கும் கோயில் குருக்களுக்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கரோனா காலத்தில் வேலையின்றித் தவிக்கும் கோயில் குருக்களுக்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில் உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, உள்ளிட்ட ரூ. 1500 மதிப்புள்ள மளிகைப்பொருள்கள் 20 பேருக்கு வழங்கப்பட்டன. எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா தலைமை வகித்தாா். கவிஞா் எஸ். கவிவா்மன், தன்னாா்வலா் கே.தங்கராஜ், வழக்கறிஞா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.