பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சாா்பிலான அகழாய்வுப் பணியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, அகழாய்வு இயக்குநா் பேராசிரியா் இனியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனா் ஆ. மணிகண்டன், வேப்பங்குடி ஊராட்சித் தலைவா் ராஜாங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
சங்ககாலக் கோட்டை இருந்த இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இடத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையினா் ஏற்கெனவே ஜிபிஆா் கருவி மூலம் அடையாளம் கண்டு கொடுத்த இடத்தில் அகழாய்வுப் பணி தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த அகழாய்வுப் பணிக்கு இந்தியத் தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடக்க நிதியாக ரூ. ஒரு லட்சம் நிதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.