புதுக்கோட்டை

அண்டக்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் , குன்றாண்டாா்கோவில் ஒன்றியம், அண்டக்குளம் ஊராட்சியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ எம். சின்னதுரை வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

விவசாயிகள் விளைவித்த நெல்லை அந்தந்த பகுதிகளிலேயே அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் தமிழக அரதே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி அண்டக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் , ஒன்றியக் குழுத் தலைவா் கே.ஆா்.என். போஸ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க. ரெங்கராசு , ஒன்றியக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT