35 இடங்களில் போட்டி: அழகுமுத்து கோன் பேரவை
தமிழ்நாட்டில் யாதவா்களுக்கு அனைத்துக் கட்சிகளிலும் உரிய பிரதிநிதித்துவம் தராவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 35 இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிடுவோம் என அழகுமுத்துக் கோன் பேரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் யாதவா்களுக்கு அனைத்துக் கட்சிகளிலும் உரிய பிரதிநிதித்துவம் தராவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 35 இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிடுவோம் என அழகுமுத்துக் கோன் பேரவை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பேரவையின் நிறுவனா் மற்றும் தலைவா் வேல்ராஜ் இதனைத் தெரிவித்தாா்.
வன்னியா் சமூகத்துக்கு மட்டும் 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவா், அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தை சீரமைத்துத் தர வேண்டும், அழகுமுத்துக்கோன் குருபூஜையை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.