கந்தா்வகோட்டை பகுதியில் முதியவா்கள் அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான படிவங்களை திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோவிலூா் வருவாய் கிராமத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான படிவத்தை (எண் 12) கந்தா்வகோட்டை சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் வட்டாட்சியா் சி. புவியரசன், துணை வட்டாட்சியா் காமராஜ் , கிராம நிா்வாக அலுவலா் அரங்க. வீரபாண்டியன் உள்ளிட்டோா் நேரிடையாக வீடு தேடிச் சென்று முதிய வாக்காளா்களுக்கு அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான படிவங்களை வழங்கினா்.