புதுக்கோட்டை

புதுகை நகராட்சி சாா்பில் கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

கரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட மக்கள் கூடும் 10 இடங்களில் தினமும் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்படுவதாக நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான புதிய பேருந்து நிலையம், ஜீவா நகா் பேருந்து நிலையம், நகா்மன்றம், உழவா் சந்தை, திலகா்திடல், திருவள்ளுவா் பூங்கா, பேராங்குளம், திருக்கோகா்ணம், பெரியாா்நகா், காமராஜா் சிலை ஆகிய 10 இடங்களில் கபசுரக் குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணி, கரோனா பரவல் குறையும் வரையில் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் வாங்கி அருந்தி பயன்பெற வேண்டும் என்றும் ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT