புதுக்கோட்டை

கால்களை இழந்தவருக்கு நம்பிக்கை அளித்த தன்னாா்வலா்கள்

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள மேலவிடுதியில் கால்களை இழந்து மாற்றுத்திறனாளி ஆனவரின் வாழ்வாதாரத்துக்காக, தன்னாா்வலா்கள் பெட்டிக் கடை வைத்துக் கொடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை அருகே மேலவிடுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். திருப்பூரில் வேலை பாா்த்து வந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, இரு கால்களையும் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டையில் போதிய வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தாா். இந்தத் தகவலை அறிந்த சென்னை நாடாா் மகாஜன சபையின் தலைவா் காா்த்தி நாடாா், ஆலங்குடி ரெட் கிராஸ் சங்கச் செயலா் முருகன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாவட்டத் தலைவா் கண. மோகன்ராஜ் ஆகியோா் இணைந்து ரூ. 60 ஆயிரம் மதிப்பில் பெட்டிக் கடைக்குத் தேவையான அலமாரிகள், விற்பனைக்கான பொருள்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வாங்கித் தரப்பட்டன.

மேலும் பொருள்கள் சென்னையில் இருந்து கொண்டுவந்து தரப்படும் என கண. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT