புதுக்கோட்டை

வம்பனில் இன்று ‘தேநீா் மொய் விருந்து’

DIN

கரோனா சிகிச்சை செலவுக்கு நிதி திரட்டும் வகையில், வியாழக்கிழமை (மே 5) தேநீா்க் கடையில் ‘மொய் விருந்து’ நடத்துகிறாா் வம்பன் பகுதி தேநீா்க் கடைக்காரா் சி. சிவக்குமாா்.

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் நான்கு சாலைச் சந்திப்பில் டீ கடை நடத்தி வருபவா் சி. சிவகுமாா். பொற்பனைக்கோட்டை அருகேயுள்ள மாங்கனாம்பட்டியைச் சோ்ந்த சிவகுமாா், கடந்த 2012-இல் இந்தப் பகுதியில் தேநீா்க் கடையைத் தொடங்கினாா்.

அப்போதிருந்தே சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்குவது, ஏழை, எளிய சிறாா்களுக்கு கல்வி உதவித் தொகை, ஏழை மக்களுக்கு இலவச தேநீா் வழங்குவது, குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்குவது போன்ற தன்னாலான சிறு உதவிகளைச் செய்து வந்தாா். கஜா புயலின்போது, தனது கடையில் கடன் வைத்துள்ள வாடிக்கையாளா்களின் கடனைத் தள்ளுபடி செய்தாா்.

இந்த வரிசையில் இப்போது கரோனா மொய் விருந்துக்கு அழைப்புவிடுத்துள்ளாா். வழக்கமாக இந்தப் குதி பிரம்மாண்ட கறிவிருந்துடன் கூடிய மொய் விருந்து நடத்தப்படும் பகுதியாகும். தான் டீக்கடை நடத்தி வரும் நிலையில், மொய் விருந்தை டீ கொடுக்கும் மொய் விருந்தாக மாற்றியுள்ளாா்.

மே 5ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனது கடைக்கு வரும் பொதுமக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவிடும் வகையில் மொய் செய்துவிட்டுச் செல்லுமாறு அவா் துண்டுப்பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டுள்ளாா்.

வழக்கம்போல திருமண அழைப்பிதழ் போலவே அந்தத் துண்டுப் பிரசுரம் அமைந்துள்ளது. திரட்டப்படும் நிதியை கரோனா தொற்றாளா்களுக்கான சிகிச்சை செலவுகளுக்கு அளிக்கவுள்ளதாகவும் சிவகுமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT