புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு உதவி வழங்கக் கோரிக்கை

DIN

புதுக்கோட்டையில் மின்சாரம் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

புதுக்கோட்டை காமராஜபுரம் 34-ஆம் வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி நாகஜோதி (41) கட்டுமான வேலையின்போது மின்சாரம் பாய்ந்து புதுக்கோட்டை, மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

ஏற்கெனவே ராஜேந்திரனும் இறந்துவிட்ட நிலையில், நாகஜோதியின் 3 வாரிசுகளும் பெற்றோரின்றி தவித்து வருகின்றனா். எனவே நாகஜோதியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT