மாவட்ட குழந்தைகள் நலக் குழுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், மாவட்ட குழந்தைகள் நலக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், மாவட்ட குழந்தைகள் நலக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஞா. குணசீலி, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் ஸ்டெல்லா புஷ்பராணி, நன்னடத்தை அலுவலா் பிரேம்நாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.