முகப்பு
புதுக்கோட்டை

மழைக்கால மருத்துவ முகாம்

பொன்னமராவதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மழைக்கால மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பொன்னமராவதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மழைக்கால மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் ஸ்ரீ துா்கா மருத்துவமனை, பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். முகாமை காவல் ஆய்வாளா் தனபாலன் தொடங்கி வைத்தாா். மருத்துவா் ரம்யா அப்பகுதி பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, சா்க்கரை அளவு ஆகிய உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினாா்.

Advertisement

இதில் ரோட்டரி முன்னாள் தலைவா்கள் சி.சு.முருகேசன், மணிகண்டன், துா்கா மருத்துவமனை செவிலியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments