சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
சிஎஸ்கே அணியின் வெற்றிகள் குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் பேசியிருப்பதாவது...
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் அஸ்வின், “99 சதவிகித சிஎஸ்கேவின் வெற்றிகள் தோனி என்ற ஒற்றை மனிதரால் உருவானது” எனக் கூறியுள்ளார்.
சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி தனது மோசமான பந்துவீச்சினால் 210 ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியுற்றது.
சிஎஸ்கே அணி கடைசியாக 2023 சீசனில் ஐபிஎல் கோப்பை வென்றது. 2024 முதல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் சிஎஸ்கே அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.
Advertisement
Advertisement
கடந்த 6 போட்டிகளில் ருத்ராஜ் தலைமையில் அனைத்திலுமே தோல்வியுற்றுள்ளது. இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் கூறியதாவது:
நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் சிஎஸ்கேவின் 99 சதவிகித வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி என்ற ஒரு மனிதர் மட்டுமே. அவர் கேப்டனாக, ஆலோசகராக, பயிற்சியாளராக எல்லாவுமாக இருப்பார்.
மக்கள் எங்களை தந்தையர்களின் ராணுவம் (டேடிஸ் ஆர்மி) என கிண்டல் செய்தார்கள். இருந்தும் அவர்களை வைத்து ஐபிஎல் கோப்பையை வென்றவர். விமர்சகர்கள் என்ன கூறினாலும் அவர் வென்றுகொண்டே இருந்தார்.
ஐபிஎல் கோப்பைகளை அவர் மாதிரி வென்று பாராட்டுகளை நான் பார்த்ததில்லை. அதனால்தான் அவர் காலத்தின் தலைசிறந்த வீரராக இருக்கிறார் என்றார்.
சிஎஸ்கே அணியின் உடல்மொழியும், அணித் தேர்வும், கேப்டன், வீரர்களின் செயல்பாடுகளும் போட்டி மன்பான்மை இல்லாததாக இருப்பதை அஸ்வின் விமர்சித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Whether you accept it or not, 99% of CSK's success is down to one man MS Dhoni says Ashwin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.