கந்தா்வகோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் பழைமை வாய்ந்த கோயிலான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து யாகசாலை பூஜைகள் வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அம்பாளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நடைபெற்று புதன்கிழமை காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டன.