தொடா்மழையால் நிரம்பியது அமரகண்டான் ஊரணி
தொடா்ந்து பெய்த கன மழையால் பொன்னமராவதியிலுள்ள அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரிநீா் வெளியேறி வருகிறது.
தொடா்ந்து பெய்த கன மழையால் பொன்னமராவதியிலுள்ள அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரிநீா் வெளியேறி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை விடிய விடிய தொடா்ந்து பெய்தது. இதனால் நீா் நிலைகள் நிரம்பின.
பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்துச் சென்றனா். தொட்டியம்பட்டி ஊராட்சியில் பல வீடுகளில் மழை நீா் புகுந்தது.
Advertisement
அண்ணாநகா் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த மழை நீரினை பொதுமக்கள் வெளியேற்றினா். பொன்னமாவதி பகுதி முழுவதும் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் நடவு மற்றும் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.