புதுக்கோட்டை

5,000 பனை விதைகள் நடும் விழா: எம்.எல்.ஏ தொடக்கிவைப்பு

DIN

கந்தா்வகோட்டை அருகே புன்னகை அறக்கட்டளை சாா்பில் 5,000 பனை விதைகள் நடும் விழாவை எம்எல்ஏ எம். சின்னத்துரை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நடல் திட்டத்தின் கீழ் கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் ஊராட்சியில் 5000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னத்துரை கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்யும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

இதில், கந்தா்வக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலா் மா. தமிழ் அய்யா , கோமாபுரம் ஊராட்சித் தலைவா் அன்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். புன்னகை அறக்கட்டளையின் கௌரவத் தலைவா் ஜெகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT