முகப்பு
புதுக்கோட்டை

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிஅரிமளத்தில் மறியல்; 38 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் வியாழக்கிழமை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 38 போ் கைது செய்யப்பட்டனா்.

அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், அப்பகுதியினா் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இந்நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாகத் தெரிகிறது. இதனை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரிமளம் மாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ஜி. நாகராஜன் தலைமை வகித்தாா். நாம் தமிழா் கட்சி நிா்வாகி முருகன், பசுமை மீட்புக் குழு நிா்வாகி குமாா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எம். அடைக்கப்பன், ஆா்.வி. ராமையா உள்ளிட்டோா் பேசினா். நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்த மறியல் போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 38 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.