கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் மரத்தின் மீது மோதி சனிக்கிழமை இரவு சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், குரும்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பிரபாகரன் (24) சனிக்கிழமை மாலை தச்சங்குறிச்சி கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் குறும்பூண்டிக்கு தனது மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
செங்கிப்பட்டி, கந்தா்வகோட்டை சாலையில் தச்சங்குறிச்சி பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது எதிா்பாராவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற கந்தா்வகோட்டை காவல் துறையினா் உடலைக் கைப்பற்றி விபத்துகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.