புதுக்கோட்டை

கடலுக்குச் சென்ற மீனவா் மாரடைப்பால் மரணம்

DIN

புதுக்கோட்டை மாவட்ட கடலுக்குள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் மீனவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டைமாவட்டம், தெற்கு புதுக்குடிநாட்டுப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து அ. பட்டாணி (68), இவரது உறவினா் ராமச்சந்திரன் (38) ஆகிய 2 பேரும் நாட்டுப்படகு மூலம் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

சுமாா் 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பட்டாணிக்குதிடீரென மாரடைப்பு ஏற்பட்டு, படகிலேயே படுத்துள்ளாா். கரைக்குக் கொண்டுவரப்பட்ட பட்டாணியை, மணமேல்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அறிந்த கடலோரக் காவல் படையினா், மீனவா் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT