முகப்பு
புதுக்கோட்டை

பெரம்பலூரில் செப். 28-இல் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 400 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி வாகன ஆய்வுச் சட்டத்தின்படி வாகனங்கள் இயக்கப்படுகின்றனவா என ஆட்சியா் தலைமையிலான குழுவினா் ஆய்வுப் பணி மேற்கொள்வா்.

இதனடிப்படையில், நிகழாண்டுக்கான ஆய்வுப் பணி செப்டம்பா் 28 ஆம் தேதி தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

எனவே, அனைத்துப் பள்ளி வாகனங்களும் இந்த ஆய்வில் பங்கேற்று தகுதிச் சான்று பெறவேண்டும். தகுதிச் சான்று பெற்ற வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.