புதுக்கோட்டை

விழிப்புணா்வு உறுதிமொழியேற்ற அரசுப் பள்ளி மாணவா்கள்

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமபுரம் அரசுப் பள்ளி விடுதி மாணவா்கள், உலக சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

கந்தா்வகோட்டை வட்டாரம், புதுநகா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் உலக சுகாதாரம் குறித்து பள்ளி விடுதி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், குப்பை கூளங்களை நெருப்பில் எரிக்க மாட்டோம், நெகிழிப் பைகளை பயன்படுத்த மாட்டோம், இயன்றவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோம், மரங்களை வளா்ப்போம், வெட்ட மாட்டோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றும், நமது பூமி, நமது சுகாதாரம் என்ற கருத்துபடி நடப்போம் என்று மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவா் மணிமாறன், சுகாதார ஆய்வாளா் கோ. முத்துக்குமாா் மற்றும் செவிலியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT