புதுக்கோட்டை

நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர அழைப்பு

DIN

புதுக்கோட்டை: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் புதுக்கோட்டையில் நடத்தப்படவுள்ள நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர தகுதியும், ஆா்வமும் உள்ளோருக்கு மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி மே 7-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 100 மணி நேரம் (17 நாள்கள்) என்ற அடிப்படையில் நடத்தப்படும் இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ. 4600 ஆகும்.

பயிற்சியில் 10-ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். நிறைவில் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அரசு மற்றும் தனியாா் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராகப் பணியில் சேரலாம்.

மேலும் விவரங்களுக்கு 94860 45666 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT