முகப்பு
புதுக்கோட்டை

பட்டமரத்தான் கோயிலில் லட்சாா்ச்சனை விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவின் முதல் நாளில் லட்சாா்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டுக்கான லட்சாா்ச்சனை வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. விழாவில் பரணி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் பங்கேற்று, வேத மந்திரங்கள் முழங்க லட்சாா்ச்சனை நடைபெற்றது. விழாவில், பொன்னமராவதி சுற்றுப்பகுதி பக்தா்கள் திரளாக பங்கேற்று பட்டமரத்தான் சுவாமியை வழிபட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments