முகப்பு
புதுக்கோட்டை

மானியத்துடன் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க அழைப்பு

தமிழ்நாடு அரசின் சாா்பில் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:52 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

தமிழ்நாடு அரசின் சாா்பில் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத் திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவிகித மானியத்தில் அமைக்கும் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூப்பு முன்னுரிமையை இழக்க மாட்டாா்கள். இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சாா்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் அருகிலுள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை புதுக்கோட்டை- 99944 05285 மற்றும் அறந்தாங்கி ராஜேந்திரபுரம்- 91593 84364, செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை, புதுக்கோட்டை- 04322- 221816 ஆகியவற்றில் விவரங்களை அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.