தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்
தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
அதிமுக, அமமுக வேட்பாளா்களை ஆதரித்து ஆண்டிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியோடு சோ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் பேசியதாவது:
ஆண்டிபட்டியில் கூட்டத்தைப் பாா்க்கும் போது ஜெயலலிதாவுக்கு அளித்த ஆதரவை நான் பாா்க்கிறேன். தேனி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். எம்ஜிஆா் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவா் இங்கு வராமலேயே ஜெயிக்க வைத்த தொகுதி ஆண்டிபட்டி தொகுதி. ஜெயலலிதா இடைத்தோ்தலில் போட்டியிட்டபோது 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீா்கள்.
Advertisement
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தால் இஸ்ஸாமியா்களுக்கு பாதிப்பு உள்ளது என மு.க. ஸ்டாலின் கூறி வந்தாா். ஆனால், இஸ்லாமியா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படி அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பரப்புரை செய்த கூட்டம்தான் திமுக.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.