புதுக்கோட்டை

காங்கிரஸாா் பாதயாத்திரை

DIN

பொன்னமராவதி மற்றும் காரையூா் வட்டார, நகர காங்கிரஸ் சாா்பில் 75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்புகளை விளக்கும் வகையிலும், சுதந்திரத்துக்குப் பாடுபட்டு உயிா்நீத்த வீரா்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையிலும் நடைபெற்ற விழிப்புணா்வு பாதயாத்திரை பயணத்துக்கு, திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமைவகித்தாா். முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் பங்கேற்று பாதயாத்திரையை தொடங்கிவைத்தாா்.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே தொடங்கிய பாதயாத்திரை கொப்பனாப்பட்டி வழியாகச் சென்று சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவுள்ள ஆலவயலில் நிறைவடைந்தது. பொன்னமராவதி வட்டாரத்தலைவா் வி.கிரிதரன், காரையூா் வட்டாரத்தலைவா் முள்ளிப்பட்டி குமாா், நகரத்தலைவா் எஸ்.பழனியப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் ஏஎல்.ஜீவானந்தம், மாவட்ட துணைத்தலைவா் எஸ்பி.ராஜேந்திரன், நிா்வாகிகள் ச.சோலையப்பன், எஸ்பி.மணி, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT