புதுக்கோட்டை

வெளிநாடு சென்று திரும்பிய பெண்ணுக்கு கரோனா தொற்று

புனிதப் பயணமாக வெளிநாடு சென்று திரும்பிய புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பெண்ணுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

புனிதப் பயணமாக வெளிநாடு சென்று திரும்பிய புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பெண்ணுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் புதியவகை கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 3 போ் கடந்த வாரம் ஹஜ் புனிதப் பயணமாக வெளிநாடு சென்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பிய இவா்களுக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒரு பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் உள்பட அவருடன் தொடா்பில் இருந்த அனைவரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களை சுகாதாரத் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT