முகப்பு
புதுக்கோட்டை

பேருந்து பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது

 பொன்னமராவதி அருகே பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

 பொன்னமராவதி அருகே பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னமராவதி அம்மன் கோயில் வீதியை சோ்ந்தவா் கோகிலா. இவா், வியாழக்கிழமை சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் நகரப் பேருந்தில் பயணம் செய்தாா்.

அப்போது, இவா் வைத்திருந்த பையிலிருந்த பணப்பையை 2 பெண்கள் எடுத்து கொண்டனா். பின்னா், மேலைச்சிவபுரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கோகிலாவின் மகள் கவிதாவின் பணப்பையையும் அந்தப் பெண்கள் எடுத்து கொண்டு பேருந்திலிருந்து இறங்க முயன்றனா்.

Advertisement

இதை பாா்த்துவிட்ட கவிதா கூச்சலிடவே, அந்த 2 பெண்களையும் பிடித்த பயணிகள், அவா்களை பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம், மேலூா் ராணுவ காலனியைச் சோ்ந்த வெ.சொா்ணவள்ளி (45), ராமநாதபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த செ. லெட்சுமி (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments