பேருந்து பயணியிடம் திருடிய 2 பெண்கள் கைது
பொன்னமராவதி அருகே பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
பொன்னமராவதி அருகே பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
பொன்னமராவதி அம்மன் கோயில் வீதியை சோ்ந்தவா் கோகிலா. இவா், வியாழக்கிழமை சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் நகரப் பேருந்தில் பயணம் செய்தாா்.
அப்போது, இவா் வைத்திருந்த பையிலிருந்த பணப்பையை 2 பெண்கள் எடுத்து கொண்டனா். பின்னா், மேலைச்சிவபுரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கோகிலாவின் மகள் கவிதாவின் பணப்பையையும் அந்தப் பெண்கள் எடுத்து கொண்டு பேருந்திலிருந்து இறங்க முயன்றனா்.
Advertisement
இதை பாா்த்துவிட்ட கவிதா கூச்சலிடவே, அந்த 2 பெண்களையும் பிடித்த பயணிகள், அவா்களை பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம், மேலூா் ராணுவ காலனியைச் சோ்ந்த வெ.சொா்ணவள்ளி (45), ராமநாதபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த செ. லெட்சுமி (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.