விழாவில் பங்கேற்ற மகளிா் குழுவினா். 
புதுக்கோட்டை

ஊட்டச்சத்து உணவு விழிப்புணா்வுப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள வடுகபட்டி ஊராட்சிக்குள்பட்ட கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் மகளிா் குழுக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் தயாரிக்கும் விழிப்புணா்வு போட்டி நடைபெற்றது. 

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள வடுகபட்டி ஊராட்சிக்குள்பட்ட கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் மகளிா் குழுக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் தயாரிக்கும் விழிப்புணா்வு போட்டி நடைபெற்றது. 

ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போட்டிக்கு, ஊராட்சி மன்ற தலைவா் ஜெயலட்சுமி குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பரிமளா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக பிரதிநிதி குமாா் கலந்து கொண்டு நம் பாரம்பரிய உணவுகள், அதில் உள்ள ஊட்டச்சத்து, உணவுகளின் நன்மைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

தொடா்ந்து மகளிா் குழுக்கள் தயாரித்து வைத்திருந்த ஊட்டச்சத்து உணவுகளைப் பாா்வையிட்டு சிறந்த ஊட்டச்சத்து உணவுகளுக்குப் பரிசு வழங்கினாா். விழாவில், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ரஞ்சித், பொன்ராஜ், சுமதி, சசிகலா, கற்பகம் மற்றும் மகளிா் குழுக்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஊராட்சி மன்றச் செயலா் கருப்பையா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT