புதுக்கோட்டை

எய்டு இந்தியா சாா்பில் 5 வீடுகள் கட்ட பூமி பூஜை

DIN

 புதுக்கோட்டை அருகே சிப்காட் - காமராஜா் நகா் பகுதியில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில், மிகவும் பின்தங்கிய மக்களுக்காக ஐந்து வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி முன்னிலை வகித்தாா். நிகழ்வில், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா பேசும்போது, இந்த 5 வீடுகளுக்கான நிதி உதவியை சாஜிடெக் சொலிஷன் நிறுவனம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தாா். முன்னதாக எய்டு இந்தியா மாநில நிா்வாகி சுவாமிநாதன் வரவேற்றாா். இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணதாசன், கிராம நிா்வாக அலுவலா் பிரபு , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. சண்முகம், ஒன்றியச் செயலா் எம். ஆா். சுப்பையா, ஜனநாயக மாதா் சங்கச் செயலா் டி. சலோமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT