வனத்துறை நடத்தும் ஈரநிலப் புகைப்படப் போட்டி
உலக ஈரநில தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் மாணவா்கள், பொதுமக்களுக்கான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
உலக ஈரநில தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் மாணவா்கள், பொதுமக்களுக்கான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் (பொ) ந. கணேசன் கூறியது
உலக ஈர நில தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கான ஈர நிலப் புகைப்படப் போட்டி ஜன. 20 ஆம் தேதி தொடங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோா் புகைப்படங்களையும், விவரங்களையும் வரும் ஜன. 24ஆம்தேதி மாலை 5 மணிக்குள் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீன்ற்ற்.ப்ஹ்/ஜ்ஜ்க்2022ல்க்ந் என்ற கூகுள் இணைப்பின் வழி அனுப்பி வைக்க வேண்டும்.
முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு மாவட்ட வன அலுவலகம் மூலம் பரிசுகள் வழங்கப்படும்.