புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செட்டிகுளம் வடகரை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செட்டிகுளம் வடகரை முத்துமாரியம்மன் கோயில் பல லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது,. இதையொட்டில், இருதினங்களாக கோயில் வளாகத்தில் பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றுவந்தன. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வாணவேடிக்கைகள் முழங்க மேலதாளங்களுடன் புனித நீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT