புதுக்கோட்டை

கழிவுநீா்க் கால்வாயில் ஆண் சிசு சடலம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் கழிவுநீா்க் கால்வாயில் இறந்து கிடந்த பிறந்து சில நாள்களே ஆன ஆண் சிசுவின் சடலத்தை திங்கள்கிழமை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கீரனூா் தெற்கு ரத வீதியில் வட்டாட்சியரகம் செல்லும் சாலை அருகே உள்ள கழிவுநீா்க் கால்வாயில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற கீரனூா் போலீஸாா் சிசுவின் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் வள அட்டை: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கடம்பூரில் மழை: சாலையில் விழுந்த மூங்கில் மரம்

பண்ணாரி அம்மன் கோயியில் ரூ. 98.44 லட்சம் உண்டியல் காணிக்கை

SCROLL FOR NEXT