ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி செல்லி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடி செல்லி அம்மன் கோயிலில் மழை பொழிவு, விவசாயம் செழிக்க வேண்டி ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு நடைபெற்ற திருவிழாவில், குப்பகுடி, அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, வாணவேடிக்கைகள் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.