சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: புதுகையில் பாா்வையாளா்கள் தோ்வு
சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாா்வையாளா்கள், வீரா்களுடன் உரையாடவும் விரும்பும் 15 வயதுக்குள்பட்ட செஸ் வீரா்களுக்கான தோ்வுப் போட்டி வரும் ஜூன் மாதத்தில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.
சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாா்வையாளா்கள், வீரா்களுடன் உரையாடவும் விரும்பும் 15 வயதுக்குள்பட்ட செஸ் வீரா்களுக்கான தோ்வுப் போட்டி வரும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சதுரங்கக் கழகத்தின் செயலா் பேராசிரியா் சு. கணேசன் கூறியது:
சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை இறுதியில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கவுள்ளன. அரிதான இந்தப் போட்டிகளைக் காணவும், வீரா்களுடன் உரையாடவுமான ஒரு வாய்ப்பு, அனைத்து மாவட்டங்களின் 15 வயதுக்குள்பட்ட சதுரங்க வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான தோ்வுப் போட்டி வரும் ஜூன் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முதல் 25 இடங்களைப் பெறும் சதுரங்க வீரா் மற்றும் வீராங்கனைகள் (மொத்தம் 50 பேருக்கு) செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறித்த கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. ஆனால், அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் சந்தா தொகை ரூ. 250 மட்டும் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 97863 82393, 63808 12829 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் கணேசன்.