புதுக்கோட்டை

வேளாண் அலுவலா்கள் - விவசாயிகள் ஆலோசனை

DIN

பொன்னமராவதியில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற கூட்டத்திற்கு, அட்மா ஆலோசனைக்குழு தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். பொன்னமராவதி வேளாண் உதவி இயக்குநா் பங்கேற்று புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு வட்டார விவசாயக் குழு செயல்பாடுகள் குறித்து விளக்கினா். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு தலைவா் சுதா அடைக்கலமணி பங்கேற்று புதிதாக தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசினாா். கூட்டத்தில், தோட்டக் கலை மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் பங்கேற்று அரசின் திட்டங்களை விளக்கினா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் கோ.ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். துணை வேளாண்மை அலுவலா் முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT