பொன்னமராவதியில் விஷம்குடித்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பொன்னமராவதி புதுப்பட்டி பிடாரி கோவில் தெருவைச் சாா்ந்தவா் சே. காா்த்திக் (32). காா் ஓட்டுநரான இவா், கடந்த சில நாட்களாக பணம் வாங்கல் கொடுக்கல் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஏப். 28) விஷம் குடித்து மயங்கிக் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். பொன்னமராவதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.