புதுக்கோட்டை

கூடுதல் பேருந்து வசதி கோரி அரசுக் கல்லூரி மாணவா்கள் மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி அரசு கலைக் கல்லூரிக்கு ஒரு சில பேருந்துகளே இயக்கப்படுவதால், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத்தொடா்ந்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதனால் சுமாா் 1 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT