புதுக்கோட்டை

‘குழந்தைகளுக்கு கல்வியுடன் விளையாட்டும் அவசியம்’

DIN

குழந்தைகளுக்கு கல்வியோடு விளையாட்டும் அவசியம் என்றாா் சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாட்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா்.

விழாவில், கிராமத்தினா், பெற்றோா்களுடன், அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை உள்ளிட்டோா் பள்ளிக்குத் தேவையான பொருள்களை கல்விச்சீராக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்தனா். விழாவில், ஒன்றியக்குழுத்தலைவா் வள்ளியம்மை தங்கமணி, உறுப்பினா் ஆனந்தி இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினா் சுவிதா ராஜபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT