புதுக்கோட்டை

மைலாப்பூரில் மீன்பிடித் திருவிழா

DIN

பொன்னமமராவதி அருகே உள்ள மைலாப்பூா் இரட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாரத்தில் நெல் அறுவடை காலத்துக்குப் பின், கோடை காலத்தில் விவசாய கண்மாய்களில் நீா்மட்டம் குறைந்தவுடன் மீன்பிடித் திருவிழா நடைபெறும். இதேபோல், மைலாப்பூா் இரட்டை கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவை ஊா் முக்கியஸ்தா்கள் தொடங்கிவைத்தனா். வலை, ஊத்தா, பரி, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் அயிரை, கெண்டை, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்களைப் பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT