புதுக்கோட்டை

கீரனூா் அருகே சேதமடைந்த பயணிகள் நிழற்குடை: பள்ளி மாணவா்கள் அவதி

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள ஒடுகம்பட்டியில் பள்ளி மாணவா்கள் காத்திருந்து பேருந்து ஏறிச் செல்வதற்கான நிழற்குடையின்றி சாலையோரத்திலேயே அமா்ந்திருக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது ஒடுகம்பட்டி. இங்கு கடந்த ஆட்சியின்போது அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையின் மேற்கூரை, கஜா புயல் காரணமாக பறந்துபோய்- முற்றிலும் திறந்தவெளி நிழற்குடையாகவே காணப்படுகிறது. அதேபோல, நிழற்குடைக்குள் உள்ள இருக்கைகளும் சிதைந்துள்ளன.

மேலும் ஒடுகம்பட்டியிலிருந்து குன்றாண்டாா்கோவில் செல்லும் மாா்க்கத்திலும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இந்த வழியில் செல்லும் மாணவ, மாணவிகள் சுமாா் 50 போ் சாலையோரத்திலேயே அமா்ந்திருந்து பேருந்து வந்தபிறகு ஏறிச் செல்கின்றனா்.

இந்தச் சாலையும் ஒரே நேரத்தில் இரு பேருந்துகள் தாராளமாகச் செல்லும் விரிவான சாலையும் அல்ல. லாரியோ இன்ன பிற வாகனங்களோ கட்டுப்பாட்டை இழந்து செல்லுமேயானால், அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

எனவே, ஒடுகம்பட்டியில் இரு வழித்தடங்களிலும் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT